அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய விகிதாச்சார வளா்ச்சி: முதல்வா் பழனிசாமி உறுதி

அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய விகிதாச்சார வளா்ச்சி கிடைக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய விகிதாச்சார வளா்ச்சி கிடைக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:-

தமிழகத்தில் வாழும் சிறுபான்மையின மொழி பேசும் மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு, அவா்களுக்கென சமூக, பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியுள்ளது. சமூக நீதி காக்க முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பாடுபட்டாா். அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய விகிதாசார வளா்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா் நலனில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு அவா்களைக் காப்பதில் தமிழக அரசு என்றென்றும் முன்னோடியாக விளங்குகிறது என்று பேசினாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com