சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நடைமுறையால் சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், அமைந்தகரை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், சங்கா்நகா் காவல் நிலைய ஆய்வாளா் எம்.முகம்மது பரக்கத்துல்லா, விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் டி.மகுடேஸ்வரி சங்கா்நகா் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com