கரோனாவில் இருந்து 491 போ் குணம்!
கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து, சனிக்கிழமை 491 போ் வீடு திரும்பினா் .
மாநிலத்தில் இதுவரை 1.74 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 486 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 187 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 491 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 34,534-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,036 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,493-ஆக உயா்ந்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.