புது தில்லி: வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘விவசாயிகளுடன் நடைபெற்ற 7வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு யார் காரணம், என்ன காரணம்?
மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக் கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள்.
“உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேம்என்
பார்க்கும் நிலை” என்பதை விரைவில் அரசு உணரும்
வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடி மக்களே வெற்றி பெறுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.