உத்தமபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கூலி வேலைக்கு  ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.



உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கூலி வேலைக்கு  ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தமபாளையம் ஆர்.சி. தெருவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகளை நெல் வயல் வேலைக்கு சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது கோகிலாபுரம் செல்லும் சாலையில் நிலைத்தடுமாறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது குறித்து உத்தமபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com