மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைக்க கோரி கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைக்க கோரி கிராம மக்கள் தேனி சாலையில் இருந்து ஊர்வலமாக ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன் ஜி தலைமையில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் வந்து வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரை சந்தித்தனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு பார்வையாளர் கேலரி அமைப்பதற்கான முடிவை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.