மழை பாதிப்புக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் 

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
மழை பாதிப்புக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
மழை பாதிப்புக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

மாவட்டம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் அருகே மாவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன்,  சிஐடியு மாவட்ட தலைவர் ஆர். மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com