திருப்பூர்: வாகன ஓட்டுநர்களுக்கு ரோஜா வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூரில் சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றிய வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ரோஜா மலர்களை திங்கள்கிழமை வழங்கினார்.
திருப்பூரில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொத்து வழங்குகிறார் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன்
திருப்பூரில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொத்து வழங்குகிறார் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன்

திருப்பூரில் சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றிய வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ரோஜா மலர்களை திங்கள்கிழமை வழங்கினார்.

திருப்பூர், அவிநாசி சாலை பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். 

மேலும், சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார், செந்தில்குமார், வெங்கட்டரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா, வேலுமணி, சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com