மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன் தலைமையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக கழக செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், சீர்காழி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு மீண்டும் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமைத்திடவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் எனக் கூறினர்.
அதனைத் தொடர்ந்து திமுக தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி மாவட்டச் செயலாளர் வி ஜி கே செந்தில் நாதன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர், இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாலன்,சீர்காழி ஒன்றிய அவைத்தலைவர் சிவ.மனோகரன்,சீர்காழி நகரச் செயலாளர் பக்கிரிசாமி,மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் மாமல்லன் ஆத்தூர் செல்வராஜ் ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.