கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டது. 
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை வரவேற்க அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் வரவேற்பு பதாகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் அவரது வீட்டின் அருகே அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க, கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சி எளிமையாக நடத்த அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, வாழ்த்து தெரிவிக்க அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com