வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன பேரணி
வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன பேரணி

சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து சார்பில் மகளிர் இருசக்கர வாகனம் பேரணி

சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த மகளிர் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த மகளிர் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

இந்த  பேரணிக்கு சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.பி. ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.  இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ். ரமேஷ் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.பி. ஜெயக்குமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு இருசக்கர வாகன  பேரணியைத் தொடங்கி வைத்தார். 

இந்தப் பேரணி  சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து  அலுவலகத்தில் தொடங்கி  மாதவரம் மேம்பாலம் வழியாகச் சென்று மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது. இதில் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com