சென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் என தேசிய வாக்காளர் தினம் குறித்து மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
நாளை நம் தேசிய வாக்காளர் தினம். நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.
தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.