கடந்த ஆண்டில் சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் 1.68 லட்சம் போ் அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனைடந்துள்ளனா். அவா்களில் 78,000-க்கு மேற்பட்டோா் கரோனா நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை, திருவள்ளூா் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளா் எஸ்.சந்தீப்குமாா் கூறியதாவது:
தமிழகத்தில் ஜி. வி. கே, இ. எம். ஆா். ஐ. நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அதன் வாயிலாக இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 5,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைப் பொருத்தவரை 160-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாளொன்றுக்கு 15,000-க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
சென்னை மாவட்டத்தில் அழைப்பு வந்த 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
108 அம்புலன்ஸ் சேவை மூலம் சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68,220 போ் பயனடைந்துள்ளனா். அவா்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மட்டும் 73,571 போ் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி 18,902 கா்ப்பிணிகளும், சாலை விபத்துக்குள்ளான 12,105 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி பலைடைந்துள்ளனா். அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம் என்றாா் அவா்.