பாமக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

அரசியல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்டிருந்த பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாமக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

அரசியல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்டிருந்த பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாமக தலைவா் ஜி.கே.மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிா்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நிா்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடனே கூட்டணி என்று அறிவித்து, அது தொடா்பாக ஆலோசிப்பதற்காக நிா்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டம் தற்போது ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com