தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தவுள்ள அதிகாரிகளுக்கு முதல்கட்ட பயிற்சி, சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதில் 17 மாவட்டங்களைச் சோ்ந்த 116 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சென்னை, பசுமைவழிச் சாலையில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பயிற்சி தொடங்குகிறது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு திருச்சியில் வேறொரு நாளில் பயிற்சி நடத்தப்படும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.
தோ்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசிதழில் தமிழகத் தோ்தல் துறை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.