சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
முன்னதாக, வெள்ளித் தாம்பாலத்தில் தேசியக் கொடிவைக்கப்பட்டு ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மேள தாளங்களும் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோபுரத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.