ஈரோட்டில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சசிகலா இன்று விடுதலை ஆனதை ஒட்டி தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 
ஈரோட்டில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சசிகலா இன்று விடுதலை ஆனதை ஒட்டி தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் அ.ம.மு.க சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.தங்கராஜ் தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஈரோடு ஜி.எச். ரவுண்டானாவில் தங்கராஜ் தலைமையில் அ.ம.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com