கூத்தாநல்லூர்: த.மு.மு.க.வினர் 53 பேர் இரத்த தானம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க. சார்பில், இரத்த தானம் வழங்கப்பட்டது. 
இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வட்டாட்சியர் .
இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வட்டாட்சியர் .

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க. சார்பில், இரத்த தானம் வழங்கப்பட்டது. 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியுடன் த.மு.மு.க. இணைந்து, மேலப்பள்ளி வளாகத்தில் உள்ள ரஹ்மானியா ஹாலில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு, நகரத் தலைவர் ஏ.கே.எம்.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். ம.ம.க.மாவட்டச் செயலாளர் ஏ. குத்புதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் எம்.முகம்மது பைசல் இபுறாகிம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் எம்.ஹெச். நிஜாமுதீன் வரவேற்றார். ஜெ. முகம்மது அப்துல்லா இறை வசனம் ஓதினார். இரத்ததான முகாமை, மமக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹமத்துல்லாஹ் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவர் ஆர்.ஸ்ருதி தலைமையிலான மருத்துவக் குழுவினரிடம், 3 பெண்கள் உள்ளிட்ட 53 பேர் இரத்த தானம் செய்தனர்.முகாமில், வட்டாட்சியர் ஜீவானந்தம், மேலப்பள்ளி வாயில் நிர்வாகச் செயலாளர் எல்.எம்.முகம்மது அஷ்ரப், பெரியப்பள்ளி வாயில் செயலாளர் கே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், மருத்துவர்கள் ஜே.பி.அக்பர் சலீம், ஹாஜா மைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும், வட்டாட்சியர் ஜீவானந்தம் சான்றிதழ் வழங்கினார். நிறைவாக, மமக நகரச் செயலாளர் கே.எம்.நைனாஸ் அஹமது நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com