தமிழ்நாடு
பெரியகுளத்தில் தைப்பூச விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பால சுப்பிரமணிய சுவாமிகளுக்கு . அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆதாரனைகள் நடைபெற்றது.
உற்சவர் பாலமுருகன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து , கோயில் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.