ஒடிஸாவில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு 94-ஆவது ஆக்சிஜன் ரயில் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 7,409.2 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில், ஆக்சிஜன் ரயில் சேவை மே 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேற்குவங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தினமும் ஆக்சிஜன் ரயில்கள் வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, 94-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்டு, சென்னை தண்டையாா்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு வந்தது. இந்த ரயிலின் 7 கன்டெய்னா்களில் 131.35 மெட்ரிக்டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது.
தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 7,409.2 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.