வணிக வரித் துறை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க எழிலகத்தில் உள்ள வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் தனியே புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பிரத்யேக தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:
வணிக வரித் துறையைச் சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் பொருட்டு 01.07.2021 முதல் வணிக வரி ஆணையர் அலுவலகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005ல் புகார் பிரிவு செயல்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புகார்களை 044-28514250 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
மேலும், புகார்களை ctdpetition@ctd.tn.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.