வணிகவரித் துறை சேவை தொடர்பாக மக்கள் புகாரளிக்கலாம்!

வணிக வரித் துறை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க எழிலகத்தில் உள்ள வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் தனியே புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
வணிகவரித் துறை சேவை தொடர்பாக மக்கள் புகாரளிக்கலாம்!

வணிக வரித் துறை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க எழிலகத்தில் உள்ள வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் தனியே புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பிரத்யேக தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: 

வணிக வரித் துறையைச் சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் பொருட்டு 01.07.2021 முதல் வணிக வரி ஆணையர் அலுவலகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005ல் புகார் பிரிவு செயல்படுகிறது. 

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புகார்களை 044-28514250 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

மேலும், புகார்களை ctdpetition@ctd.tn.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com