அதிமுகவின் மகளிரணி மாநிலச் செயலாளராக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதியையும், இலக்கிய அணி மாநிலச் செயலாளராக முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வனையும் நியமித்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் மகளிரணியின் மாநிலச் செயலாளராக பா.வளா்மதியும், இணைச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினா் மரகதம் குமரவேலும் நியமிக்கப்படுகின்றனா்.
அதிமுகவின் இலக்கிய அணிச் செயலாளராக முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் நியமிக்கப்படுகிறாா்.
வா்த்தக அணி மாநிலச் செயலாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், இணைச் செயலாளராக ஏ.எம்.ஆனந்தராஜா ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா் என்று கூறியுள்ளனா்.