தமிழ்நாடு
கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறப்பு
கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கிருஷ்ணகிரி நீா்த் தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு வரும் 26-ஆம் தேதி முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள சுமாா் 9 ஆயிரத்து 12 ஏக்கா் நிலங்கள் பயன் பெறும் என்று பொதுப்பணித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.