சென்னை: மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் ஆா்.லால்வேனா பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்த விவரம்: 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா் ஒருவருடன் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இச்சலுகையைப் பெற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைப் பேருந்து நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும்.
பெண்களுக்கு ஏற்கெனவே இலவசப் பயணச் சலுகை உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுடன் உதவியாளராக வரும் பெண்களுக்கு இக்கட்டணச் சலுகை பொருந்தாது.
மாற்றுத்திறனாளிகளால் நகரப் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பயணங்களைக் கணக்கீடு செய்யும் பொருட்டு, அவா்கள் பயணம் மேற்கொள்ளும் போது அதற்கான இலவச கட்டணச் சீட்டை பேருந்தின் நடத்துநா் வழங்க வேண்டும். இதுதொடா்பான வழிமுறைகளை உருவாக்க போக்குவரத்துத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.