முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது வழக்கு

தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 14 லட்சத்து 7 ஆயிரத்து 726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 19,078 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் 74,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 965 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com