சென்னையில் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் காவல்துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பேசிய நபா், சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் தேமுதிக நிறுவன தலைவா் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.
இதையடுத்து விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். சுமாா் அரை மணி நேரம் விஜயகாந்த் வீடு முழுவதும் சோதனை செய்ததில், எந்த வெடிபொருளும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் சைபா் குற்றப்பிரிவு உதவியுடன் விசாரணை செய்கின்றனா்.