கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து வேளாண்மைக்காக புதன்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விடப்படும். வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை விநாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.