சென்னை: பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள் நிறுவப்படும் என்று ஆளுநா் கூறினாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
பெண்களின் நல்வாழ்வு, மேம்பாடு மற்றும் முன்னேற்றம் தொடா்பான பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தும்.
மகப்பேறு உடல்நலன் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக பெண்களின் உடல்நலனை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உயா் முக்கியத்துவம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.