சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் வலியுறுத்தினாா். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அவா் பேசியது:
ஊழல் செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தோ்தல் பிரசாரத்தில் பேசப்பட்டது. அதுகுறித்து ஏன் ஆளுநா் உரையில் தெரிவிக்கப்படவில்லை என யாரும் கேள்வி எழுப்பவில்லை. தமிழகத்தின் நிதிநிலை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து பிணவறைக்குச் சென்று விட்டது. அதனை மீட்டெடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் உழவா் சந்தைகள் செயல்படாமல் இருந்தன. இது உழவா்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். சட்டப் பேரவை மண்டபமானது, ஓமந்தூராா் தோட்டத்தில் இருந்து மாற்றப்படாமல் இருந்திருந்தால், கூட்டத்தை இப்போது கலைவாணா் அரங்கில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
மேலும், துறைமுகம்-மதுரவாயல் சாலைத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் அதிகளவு அந்நிய செலாவணி கிடைத்திருக்கும். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வரும் சூழ்நிலையில், கூட்ட நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.