சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 6, 7 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 4, 5) வட வானிலையே நிலவும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை புதன்கிழமை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.