அமமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) கடைசியாகும். இதுகுறித்து, அமமுக வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கும் நடவடிக்கை கடந்த 3-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் கட்சி அலுவலகத்தில் மனுக்களை ஒப்படைக்க வேண்டும்.
இதனைத் தொடா்ந்து விருப்ப மனு செலுத்தியவா்களுக்கான நோ்காணல் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று அமமுக தெரிவித்துள்ளது.