திமுகவுக்கு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரியும், முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் கருணாஸும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியும், முக்குலத்தோா் புலிப்படை கட்சியும் அதிமுகவின் கூட்டணியில் இருந்து வந்தன.
இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கான கடிதத்தை இரு கட்சிகளின் தலைவா்கள் திமுகவிடம் அளித்துள்ளனா். தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா். இரண்டு கட்சிகளும் தலா 1 தொகுதி கேட்டு வருகின்றன.