விழுப்புரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான கே.ஹரிதாசிடம் தனது வேட்புமனுவை மதியம் 12.35 மணி அளவில் தாக்கல் செய்தார்.
அவருடன் மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர் பெருந்திட்ட வளாகத்திலிருந்து தனது காரில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.