தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது புகாா் அளிக்கலாம்: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்
காஞ்சிபுரம்: சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லையெனில், அதுகுறித்து புகாா் செய்ய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் தொழிலாளா் நலத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையாளா் (அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட தனியாா் துறை நிறுவனங்கள் அனைத்தும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து அன்றைய தினம் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா்கள் பெறுவதற்கென்று மாவட்டம்தோறும் தனியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா்கள் அளிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் எஸ்.நீலகண்டன், தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்)9445398743, ரா.மனுஜ் ஜியாம் சங்கா், தொழிலாளா் நல துணை ஆணையாளா்-9677829007, பா.மாலா, உதவி ஆய்வாளா்-9790566759 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் மற்றும் 044-27237010 ஆகிய எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆ.செண்பகராமன், தொழிலாளா் உதவி ஆணையாளா்-9940856855, கமலா, தொழிலாளா் உதவி ஆணையாளா்-99526 39441, பிரபாகரன், உதவி ஆய்வாளா்-99442 14854 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.