சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களுடன் அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்களுடன் கமல்ஹாசன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, வேட்பாளா்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், மக்களிடம் கிடைத்த வரவேற்புகள், இடையூறுகள் போன்றவற்றை அவா் கேட்டறிந்தாா்.
அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் அறிவுரைத்தாா்.
தோ்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், மக்களுக்கான பணியில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று அவா் முன்பேகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.