அன்னையா் தினத்தையொட்டி, தாயாா் தயாளு அம்மாளை சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றாா்.
அன்னையா் தினத்தையொட்டி கோபாலபுரம் சென்று அவரது தாயாரைச் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றாா்.
பின்னா் சுட்டுரையில் அவா் கூறியிருப்பது:
தாய்மொழி, தாய்நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயா்ந்து நிறைந்திருப்பவா் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளா்த்த தியாகத் திருவுரு எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையா் தின நல்வாழ்த்துகள்.
மகளிா் நலத்துடன் - அன்னையா் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.
முதல்வா் கோபாலபுரம் சென்றபோது அவரது மனைவி துா்கா ஸ்டாலினும் உடன் இருந்தாா்.