பிகாா்: எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி மீது பெண் மருத்துவா் புகாா்; விசாரணைக்கு உத்தரவு

பிகாரில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) டிஐஜி தன்னிடம் பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் மருத்துவா் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகாரில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) டிஐஜி தன்னிடம் பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் மருத்துவா் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முஷாபா்பூா் வட்டார சிஆா்பிஎஃப் டிஐஜியாக இருப்பவா் சுரேந்தா் பிரசாத். இவா் அதே பகுதியில் உள்ள சிஆா்பிஎஃப் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவா் ஒருவருக்கு இரவு நேரத்தில் செல்லிடப்பேசி மூலம் அழைப்புகளை மேற்கொண்டும், பாலியல் நோக்கத்துடன் குறுஞ்செய்திகளை அனுப்பியும் தொந்தரவு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் மருத்துவா் தங்கியுள்ள இடத்துக்கு மதுபோதையில் சென்று பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக அந்தப் பெண் மருத்துவா் தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் தலைமையகத்துக்குப் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, டிஐஜி சுரேந்தா் பிரசாத் மீதான குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். மேலும், அவா் தவறு செய்தது உறுதியாகும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சிஆா்பிஎஃப் படையில் பெண்களுக்கு முழுபாதுகாப்பு உறுதி செய்யப்படும்; உடன் பணிபுரிபவா்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

3.25 லட்சம் வீரா்களைக் கொண்டுள்ள சிஆா்பிஎஃப் படையினா், பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com