அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீா், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்த தொடா்ந்து, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டாா். அந்த வகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்தவா்கள் பணிக்கு வரும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், முதல்கட்டமாக 200 பேருந்துகள் திங்கள்கிழமை (மே 10) முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com