ராசிபுரம்: தலைமைக் காவலர் கரோனாவிற்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கரோனா தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ராசிபுரம்: தலைமைக் காவலர் கரோனாவிற்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கரோனா தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் சி.பாலசுப்பிரமணியன் (52). சில மாதங்களுக்கு முன் இவர் மங்களபுரம் காவல் நிலையத்திற்கு அயல் பணிக்காக மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com