தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் விதிமீறிச் செல்லும் பொதுமக்களை கண்காணிக்கவும், காலை 10 மணிக்குள் மக்களை ஒழுங்குப் படுத்தவும் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளனர்.
தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மேடையில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல் துறையினா் ஒலி பெருக்கி அமைத்து, சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து, எச்சரிக்கை செய்து வருகின்றனா்.
தம்மம்பட்டியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.