முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா
டிசம்பர் 24 ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சென்று சந்தித்தார்.
டிசம்பர் 24-ஆம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பாவேந்தரின் மூத்த வழித்தோன்றல் கவிஞர் முடியரசன் மற்றும் சங்ககாலப் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும் எனவும் இந்த நிகழ்வின்போது கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவதாகக் கூறினார்.