தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. தொடர்ந்து மிதமான வெயில் நிலவியது.
பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.