ஈரோடு: சக்தி மசாலா, இந்திய அரசின் நறுமண பயிர்கள் வாரியம் நடத்திய விழாவில், மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் தூள் பாக்கெட் வழங்கப்பட்டது.
ஈரோடு சக்தி மசாலா நிறுவனமும், இந்திய அரசின் நறுமண பயிர்கள் வாரியமும் இணைந்து ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நறுமண பயிர்கள் வாரியம் ஈரோடு மண்டல அலுவலக உதவி இயக்குநர் கனகதிலிப்பன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் நோய் எதிர்ப்பு திறன் கொடுக்க உள்ள மஞ்சள் தூள் பாக்கெட் மாணவிகள் மற்றும் நிகழ்ச்சி கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் கலை மகள் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.