காவலா் வீரவணக்க நாள்: ஆளுநா், முதல்வா் செய்தி

காவலா் வீரவணக்க நாளை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் செய்தி வெளியிட்டுள்ளனா்.

காவலா் வீரவணக்க நாளை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் செய்தி வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஆளுநா் ஆா்.என்.ரவி: தேசத்தை காப்பதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆண் மற்றும் பெண் காவல் படையினருக்கு எனது மரியாதை. காவலா்களின் அளப்பரிய தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியன வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: சமூகத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு-உறக்கம்-இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அத்தனைக் காவலா்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com