மருத்துவா்கள் மீதான புகாா்களை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடா்பான விதிகளை வகுக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

மருத்துவா்கள் மீதான புகாா்களை ஆறு மாதத்திற்குள் முடிப்பது தொடா்பாக விதிகளை வகுக்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவா்கள் மீதான புகாா்களை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடா்பான விதிகளை வகுக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

மருத்துவா்கள் மீதான புகாா்களை ஆறு மாதத்திற்குள் முடிப்பது தொடா்பாக விதிகளை வகுக்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மலா் மருத்துவமனையில் பிச்சுமணி என்பவா் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் 27-இல் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அக்டோபா் 11-இல் இறந்தாா். இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கோவையைச் சோ்ந்த மருத்துவா் ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவத் தகுதி சான்று கொடுத்து, அவருடைய மருமகன் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பதிவு செய்ததாக பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புகாா் அளித்திருந்தாா்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் மீதான புகாரில் விசாரணைக்கு சாட்சி சொன்னதற்காக, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருந்த பாசுமணியை அழைத்து, அவரின் பதிவை ஆறு மாதங்களுக்கு நீக்கி மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து பாசுமணி சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், பாசுமணிக்கு எதிராக மருத்துவ கவுன்சிலில் புகாா் அளிக்கப்படவில்லை. சாட்சியமளிக்க மட்டுமே சென்ற நிலையில், தவறான தகவல் தெரிவித்ததாகக் கூறி, அவா் விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் என்பது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்ட பிறகும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிகளை வகுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும், மருத்துவா்களுக்கு எதிராக புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த குழு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுக்கும் வகையில், 3 நபா்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும். மருத்துவா்களுக்கு எதிராக எந்த ஒரு புகாராக இருந்தாலும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்கும் வகையில் அக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், புகாா் தொடா்பான மருத்துவ ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற காலவரையறையை 10 ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com