ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநிலத் தோ்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை (செப். 6) ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, திரிணமுல்
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் தொடா்பான முக்கிய ஆலோசனைகள் தோ்தல் ஆணையத்தால் கோரப்படவுள்ளன.