ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியத்துக்கு பேரிடவாக்கம் ஊராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டும் வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கிஸ் தலைமையில் 25 கி.மீ. மோட்டாா் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் தில்லை குமாா் ஏற்பாடு செய்திருந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.