மேட்டூர்: நீட்தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவர் தனுஷ் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கூழையூரில் நீட்தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவன் தனுஷ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.