கரோனா: மேலும் 2579 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 2,579 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 969 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா: மேலும் 2579 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,579 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 969 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.95 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இதுவரை 8 லட்சத்து 86,673 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,527 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 58,075-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,879 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 19 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,719-ஆக உயா்ந்துள்ளது.

இவ்வாறு நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com