தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை வீசி சூறை காற்றுடன் பெய்த மழையில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து வாழைகள் சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி, சக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.
இப்பகுதியில் வியாழக்கிழமை மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை பெய்தது. சூறவாளி காற்றில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல இலட்சம் மதிப்பிலான சுமார் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பிச்சைமணி தெரிவித்ததாவது:
வங்கிகளில் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து பயிரிட்ட வாழை பிஞ்சு பருவம் மற்றும் பூவாக உள்ள நிலையில் சூறாவளி காற்றினால் முற்றிலும் முடிந்து சேதமடைந்துள்ளதால், உரிய நிவராணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.